பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் கணித்த மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி  பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_17.html

துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்க...https://www.agnimurasu.com/2021/11/blog-post_22.html

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு. தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 2ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 6¸8¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 5¸11ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம். வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களுக்கு ஜென்மச்சனி காலம் ஆகும். ஜென்மகுரு காலம் முடிந்துவிட்டது. உங்கள் உடம்பில் ஒருவிதமான தெளிவுபெறக் கூடிய சூழ்நிலை உண்டு. ஜென்மச்சனி காலமாக இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் என்பதால் கெடுபலன்களை கொடுக்கமாட்டார். இருந்த போதிலும் சில அசௌகரியங்கள் தென்பட வாய்ப்பு உண்டு. அசதி¸ ஞாபகமறதி¸ உறவினர்களால் மன அமைதி கெடுதல் என சில சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும் பைரவருக்கு ஏற்ற சுபம் உண்டு.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பொருளாதார ரீதியான அமைப்புகள் சற்று உயரும் காலம் ஆகும். வரவேண்டிய தொகைகள் வசூலாகும். கொடுக்க வேண்டியதையும் கொடுத்து பிரச்சினைகளை முடித்து வைப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த உட்பூசல்கள் படிப்படியாக விலகும் காலம் இதுவாகும். குடும்பத்தில் கடந்த காலத்தை விட இக்காலத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்கால சேமிப்பிற்கு இக்காலம் தொட்டே முயற்சி செய்வீர்கள். உங்கள் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அடுத்தவர்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம். நாமும் பிறர் கருத்தை ஏற்க வேண்டாம்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. இது நல்லதல்ல. உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. ஆனால் இரண்டும் இருப்பது போல் வெளியில் காட்டிக் கொள்வீர்கள். தினமும் காலை எழுந்தவுடன் உங்களது இரு உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை கூடும். உள்ளம்¸ உடல் இரண்டும் வலிமை பெறும். உங்கள் சகோதர-சகோதரி பாவம் அவ்வளவு உயர்வாக இல்லை. அவர்கள் பொருட்டு சில விசயங்களில் நீங்கள் கவலை கொள்ள நேரிடும். தேவையில்லாத கவலை. அவர்கள் பாடு அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று விட்டுவிடுங்கள். நல்லதே நடக்கும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் வயிறு¸ இரத்தம்¸ கை¸ கால் சம்பந்தப்பட்ட அமைப்பில் நோய் தாக்கம் உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை மேம்படும் காலமாகும். தாயால் சிலர் ஆதாயம் அடையமுடியும் என்பதால் அவரை அனுசரித்து செல்வது நல்லது. வீடு¸ மனையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு மனை யோகம்¸ வீடு வாங்கும் யோகம் உருவாகும். உங்களது வண்டி வாகனம் ஓரளவு நல்ல லாபம் தரும் சூழ்நிலையில் இருந்தாலும் விரயச் செலவுகள் அதிகமாக தென்படும். கவனம் தேவை.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களது பூர்வ புண்ணிய பலம் குறைந்துள்ளது. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனை அல்லது திருப்பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள். பாவ பலன் குறைந்து புண்ணிய பலம் கூடும். உங்களது புத்திர பாக்யம் ராகுவால் தடைபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை தொடரும். அதன்பின் ராகுப்பெயர்ச்சி ஆகிவிடுவார். புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரம் செய்யவும். நிச்சயம் குருவருள் திருவருள் புரிவார். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மந்தமாக இருந்தாலும் செயல்களில் தீரராக இருப்பார்கள்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக் கொடுக்கும் அல்லவா? அப்படிப் பார்த்தல் கடன் கூடும் போல் தெரிகிறதே? ஆமாம் கூடத்தான் செய்யும். அது நீங்கள் உங்களுக்கு வாங்கியது கிடையாது. அடுத்தவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்ததாகும். கடன் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் வாரம் ஒருமுறை பச்சை காய்கறி உண்ண பழகுங்கள். அல்லது முருங்கைக்கீரை சூப்¸ தினமும் பருகிவர மேற்கண்ட நோய்கள் விலகும்.

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். உங்களுக்கு தற்சமயம் குருபலம் வந்தாலும் சனிபகவானின் பார்வையால் சிற்சில தடங்கல்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. தடைகளை தகர்த்து திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று பரிஹாரம் செய்து வரவும். திருமணங்கள் இனிதே நடைபெறும். திருமணமான தம்பதியருக்கு நடுவில் சில வாய்வார்த்தை பிரச்சினைகள் ஏற்படும். இருவரும் அமைதியாக இருந்துவிடுவது நல்லது. அல்லது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணகோல முருகரை தரிசனம் செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். உங்கள் உடம்பில் சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஜூரம்¸ சளி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலமும் வந்துவிட்டது. உங்களின் சத்ரு ஸ்தானம் பலமாக உள்ளது. மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்படவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக வைக்கவும். பிறர் குறை கூறுவது போல் இருக்கக் கூடாது.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானம் மிக நன்றாக இருக்கும். தந்தையின் ஆயுள் தீர்க்கம் உண்டாகும். தந்தையின் உடம்பில் நரம்பு¸ சதை¸ கை¸ கால் மூட்டுவலி போன்றவைகளில் நோய் தாக்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையின் சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். தந்தையை ஒருசிலர் மட்டும் விமர்சித்து தனியாக வாழ்வார்கள். உங்களது கல்வியோகம் குருபகவான் அமைப்பால் சிறந்து விளங்கும். ஒரு சிலருக்கு தடைபட்ட கல்வியை தொடரக்கூடிய மனநிலை ஏற்படும். வேறு சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிப்பை தொடர்வார்கள்.

See also  12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சோமாசிபாடி ஏரி

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுகின்றது. தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் என்பது குறைவாகஇருக்கும். விவசாய தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை மாறுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்டத் துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வுகளும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். கேதுபகவான் லாபத்தில் அமர்ந்தால் மனரீதியான¸ ஞான ரீதியான¸ புத்தி ரீதியான லாபங்களை கொடுப்பார். ஒரு சிலருக்கு தொழில் நன்றாக நடந்து¸ வருமானம் குறைவாக இருந்தாலும் தொழிலில் கண்டிப்பாக மேன்மையை தருவார். கையில் காசை தங்கவிட மாட்டார். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யச் சொல்வார். முதலீடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை செய்தபின் முதலீடு செய்யவும். ஏனெனில் ஜென்மச்சனி காலம் அல்லவா! வரும் காலங்களில் சேமிப்பை ஊக்குவித்து விரயத்தை குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களது இந்த ஸ்தானம் மேடு¸ பள்ளம் நிறைந்ததாக இருக்கும். குரு¸ கேது கிரகங்கள் உங்களுக்கு துணை நிற்கும். என்னதான் ஏழரைச்சனி என்றாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிகளவு விரயபலன்களை செய்யமாட்டார். ஆனால் 5ல் உள்ள ராகு சற்று அளவுக்கதிகமான சோதனைகளை கண்டிப்பாக கொடுத்தே தீருவார். எல்லாக் காலங்களும் நமக்கு சாதகமாக இருப்பது இல்லை. அதே சமயம் நாம் நமது குடும்பம்¸ நாம் செல்லும் பாதை போன்றவற்றின் அடிப்படையிலே நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் இராசி அதிபதி சனிபகவான் இஷ்டதெய்வம் அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் அரணாக இருப்போம்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு பரிஹாரம் செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ முதியோர்களுக்கு உணவு தானியம் வழங்குவதும் நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

கோபுரத்திற்கு மதிப்பே அதன்மேல் உள்ள கும்பங்களே! அத்தகைய கும்பத்தை அடையாளமாக கொண்ட கும்பராசி நேயர்களே! நடுத்தரமான வட்ட வடிவமான முக அமைப்பு¸ பருத்த உருவம்¸ வசீகரம்¸ தர்ம சிந்தனை¸ வெற்றி தோல்விகளை சமமாக கருதும் தன்மை¸ எடுத்த காரியத்தில் சாதிக்கும் திறமை¸ பிறருக்கு உதவி செய்வதில் சுயநல பாங்கு¸ பல யுக்திகளை கையாண்டு வெற்றி அடைய கூடிய கும்பராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் உங்கள் ராசியில் அமர்ந்து¸ அங்கிருந்து அவர் 5¸7¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 12ல் அமர்ந்து 2¸6¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 4¸10ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஜென்ம குருவாக வலம் வர உள்ளார். ஆக உங்களது உடல் அமைப்பானது சற்று பின் தங்கும் சூழ்நிலை உண்டு. ஏற்கனவே ஏழரைச்சனியில் விரயச்சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அதிக உளைச்சல்களால் அவதிப்பட நேரிடும். இதனால் நாம் பார்க்கும் வேலை அல்லது செய்தொழிலில் ஒருவித தயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மன அழுத்தம் தான் காரணம். எல்லோருக்கும் புத்திகூறும் நீங்கள் இந்த காலத்தில் அடிசறுக்குவது உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமே.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே தனவரவில் தடை ஏற்படும் காலமாகும். நாம் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைப்பார். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் ஒரு காசு மிச்சம் பிடிப்பது என்பது சிரமமானதாக இருக்கும். இதனால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் தோன்றும். மனைவி உங்களுக்கு அடங்கியவர் என்றால் உங்களை ஏளனமாக பார்ப்பார். மிஞ்சியவர் என்றால் கண்களை உருட்டி பார்ப்பார். எச்சரிக்கை தேவை. உங்கள் வாக்கு ஸ்தானம் பலவீனமாக உள்ளதால் தேவையின்றி பேசுவதை தவிர்க்கவும். பேசினால் பிரச்சினை ஏற்படும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு வலுப்பெற்று உள்ளது. இயற்கையிலேயே உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தை உங்களது மன தைரியத்தால் தான் ஓட்ட முடியும். மேலும் உங்களுக்கு குருபகவானின் 5¸7¸9 பார்வை பலம் அருமையான பலன்களைத் தரும். உங்களின் சகோதர சகோதரி ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதேசமயம் உங்களை ஒருவழி உண்டு பண்ணாமல் விடமாட்டார்கள். அவரவர்கள் அவர்கள் இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு பொதுப் பிரச்சினைக்கு மட்டும் உங்களை நாடுவார். மிக கவனமுடன் செயல்படவும். அதே சமயம் அவர்களை பகைக்கவும் வேண்டாம்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இந்த இடம் சுகஸ்தானம் ஆகும். சுகத்தில் ஒரு அலைக்கழிப்பு நிச்சயம் உண்டு. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் அவரின் மன இயல்புக்கு ஏற்ப உங்களால் நடக்க முடியாது. தாய்-மக்கள் உறவுமுறை அவ்வளவு சரியில்லாத நிலை தென்படுகிறது. அனுசரித்து செல்லவும். உங்களது வீடு¸ மனை சம்பந்தப்பட்ட அமைப்பானது இருப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு வீடுமாற்றம்¸ இடமாற்றம் ஏற்படலாம். வண்டி-வாகனயோகம் தற்சமயம் உங்களுக்கு இல்லை. சற்றுகாலம் பொறுக்கவும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. மிக நல்ல அமைப்பு ஆகும். ஜென்ம குரு¸ ஏழரைச்சனி காலத்தில் இந்த மாதிரியான குருவின் 5ம்பார்வை விழுவது உங்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றும். உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிசேக ஆராதனை செய்து வரவும். புண்ணியம் கூடும்.உங்களது புத்திரபாக்ய ஸ்தானம் நன்றாக உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்யம் நிச்சயம் கிட்டும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மிக அருமையாக உள்ளது.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே ஒருபுறம் கடன்களுக்கான தீர்வு வழி கிடைக்கும். மறுபுறம் உடல்நலம் கெடும். உங்கள் கடன் ஸ்தானமானது சிக்கல்கள் இன்றி பைசல் செய்யப்படும். நீங்கள் கொடுத்த கடனும் தாமதமின்றி வரப்பெறும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல்நிலையில் நீரால்¸ மனதால்¸ பயத்தால் சில நோய்கள் வந்தே தீரும்¸ நீரால் வருவதை மருத்துவரிடம் சென்று தீர்க்க முடியும். மற்றவைகளை நாம் நமது தன்னம்பிக்கை கொண்டே  தீர்க்க முடியும். தினமும் காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை பிறக்கும்.

See also  பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே உங்களுக்கு குருபலம் இல்லையென்றாலும் குருபார்வை பலத்தால் சில திருமணங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. இருந்த போதிலும் ஜெனன ஜாதகத்தில் சரியான திசா புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கே இது பொருந்தும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையில் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் களைவதற்கான நேரம் இதுவாகும். எவ்வித செயல்களிலும் கடைசியில் விட்டுக்கொடுத்து போகும் நீங்கள் இதிலும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள திருமணக்கோல ஸ்ரீநாராயணபெருமாளை தரிசிக்க நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் உங்கள் ராசிநாதன் அமைப்பால் சரியாக உள்ளது. உங்கள் ஆயுள்பாவம் சனியருளால் தீர்க்கம் பெறுகிறது. உடல் நிலையில் அவ்வப்போது சில இடர்பாடுகள் காணப்பட்டாலும் அவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மன அழுத்தமே உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் குருவருளால் தீர்க்கமாக உள்ளது. கணவன்-மனைவி இடையே சில விரிசல்கள் இருந்தாலும் அவற்றை பேசி சரிசெய்து விடுவீர்கள். உங்கள் சத்ரு ஸ்தானம் உங்களது எதிரிகளால் ஏற்படுவது இல்லை. நீங்கள் நம்பிக்கை வைக்கும் சிலரால் ஏற்படும் விரோதமானது உங்களை மலைக்க வைக்கும்.

தந்தை¸ கல்விஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. இந்த ஸ்தானத்திற்கு ஏற்ற¸ இறக்கமான பலன்களே நடைபெறும். உங்கள் தந்தையின் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருந்தாலும் வயதானவர்கள் இருந்தால் சற்று கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உண்டு. தந்தைக்கும் உங்களுக்கும் போதிய மன ஒற்றுமை இருக்காது. இதனால் இருவருக்கும் இடையில் சில உரசல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்களது கல்வி ஸ்தானம் குருபார்வையால் புனிதம் பெறும். விடுபட்ட கல்வியை தொடர வாய்ப்புக்கள் உண்டு. உங்களின் உயர்கல்வி அமைப்பானது விருப்பமான பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப அமையும் என்பதில் ஐயமில்லை.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகையால் இந்த ஸ்தானத்திற்கு சற்று தடைகள் உருவாகும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தடங்கல்களான அமைப்பும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானம் சஞ்சலம் உள்ளதாக இருக்கும். குருவின் பார்வையால் வருமானம் சரிவர இருந்தாலும் விரயங்கள் தொடர்ந்து வந்து கொண்டே வரும். எதை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் எதையும் விட்டு வைக்க முடியாது அல்லவா? சந்தித்துதான் ஆகவேண்டும். சாதிக்க வேண்டுமென்றால் உங்கள் மனது ஒருநிலைப்பட வேண்டும். உங்கள் மனது ஒருநிலைப்பட உங்கள் சுற்றமும் நட்பும் விடாது. பின் என்ன செய்ய? நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று முதலில் நம்புங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானம் இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கும். எந்த ஒரு பெரிய கிரகங்களும் சாதகமான சூழ்நிலையில் இல்லை. இருந்தாலும் குரு பார்வை ஒன்றே இத்தருணத்தில் உங்களை காப்பாற்றும். எந்த சமயத்திலும் நீங்கள் கலங்க வேண்டாம். உங்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பம் ஆகாது. ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏதாவது ஒரு இன்னல் வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். இதனைத் தவிர்க்க முயல வேண்டும். உங்கள் ராசி அதிபதி சனிபகவான் இஷ்டதேவதை விநாயகர் இவர்களை வழிபட்டு வர விக்னங்கள் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குருபகவானை தரிசனம் செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு-கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ பொன்னிறம்¸ மஞ்சள். அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல் பரிகார யந்திரங்கள் : கும்ப ராசி யந்திரம். ஸ்ரீஅனுமன் யந்திரம். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் வசிக்கும் சமுத்திர ராஜனின் அடையாளமான மீனின் அடையாளம் கொண்ட மீன ராசி நேயர்களே! நீண்டு நெடிய தேகம் கொண்ட நீதி¸ நேர்மை தவறாத¸ சாஸ்திர சம்பிரதாயங்களில் விருப்பம் கொண்ட¸ மதப்பற்று அதிகம் உள்ள¸ உழைப்பை நம்பிய¸ பெண்ணாசை கொண்ட உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்ட¸ தியாக மனப்பான்மை கொண்ட மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 12ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து – அவர் 4¸6¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 11ல் அமர்ந்து 1¸5¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 3¸9ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. ஆகவே உடம்பு விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த அமைப்பானது குறைந்த காலத்திற்குத்தான். அதன்பின் சரியாகிவிடும். உள்ளுக்குள் ஒருவிதமான மனபயம் இருந்துகொண்டே இருக்கும். எடுக்கும் காரியங்களில் பதற்றம் ஏற்படும். இது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கி¸ நீங்களும்¸ உங்கள் குடும்பத்தையும் அல்லாட வைப்பீர்கள். உங்களிடம் உள்ள சுய தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்தால் அனைத்தும் சுபமாகவே நடக்கும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் 11ல் இருக்கும்வரை தனவரவில் தடை ஏதும் ஏற்படாது. ஏதாவது ஒருவகையில் பொருளாதாரம் சீர்  செய்யப்படும். ஆனால் குருபகவான் விரயஸ்தானத்தில் அமர்வதால் சற்று சுபவிரயங்களுக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் சுபீட்சமான சூழ்நிலை தென்படும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் அனைவரின் உள்ளங்களில் ஒருவிதமான மிரட்சி தென்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்துடன் “சிவகுடும்பம்” தரிசனம் செய்து வரவும். உங்கள் வாக்குஸ்தானம் பலமிழந்து உள்ளது. எதைப் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். கவனம் தேவை.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஏதோ ஒரு குருட்டு தைரியம் உங்களை வழிநடத்திக் கொண்டுள்ளது. சுய தைரியத்திற்கு நீங்கள் முயல வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அடுத்தவர்களின் சொற்களை நம்பி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் சகோதர சகோதரி ஸ்தானம் மிக பலமாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயல்வார்கள். ஆனால் இடையில் பேச்சால் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது. அவர்களால் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

See also  விஜிலென்ஸ் போலீஸ் விசாரணையில் பெண் பி.டி.ஓ

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். ஆனால் உடல்நிலையில்¸ நரம்பு¸ இடுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் ஏதாவது நோய்கள் ஏற்படும் காலமாகும். உங்கள் வீடு¸ மனை அமைப்பில் பெரிய நன்மைகள் ஏற்படும் காலமாகும். குருவால் விரயச் செலவுகள் உண்டு என்றாலும் அதை வீடு வாங்குவதற்கான சுபவிரயச் செலவாக மாற்ற வேண்டும் அல்லது தொழிலில் மூலதனமாக போட வேண்டும். உங்களது வண்டி வாகன ஸ்தானம் ஓரளவுதான் சுபபலம் ஏற்படும். விரயச் செலவுகள் ஏற்படும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. இது நல்லதல்ல. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது ஏதாவது திருப்பணி வேலைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் புண்ணிய பலம் கூடி பாவபலன்கள் குறைவாகும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சுமாரான காலம் ஆகும். குழந்தை இல்லாதவர்கள் ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால் தக்க பரிஹாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக்கொடுக்கும் அல்லவா! ஆகவே உங்களுக்கு கடன் ஸ்தானமும்¸ உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வலுப்பெறும் காலமாகும். ஆகவே கடன் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஒருமுறைக்கு இருமுறை யோசித்தபின் எந்த ஒரு செயலையும் செய்யவும். உங்கள் உடல்நிலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். சூடு சம்பந்தமாக தோல் நோய்களும்¸ இரத்தம்¸ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை தக்க நேரத்தில் எடுக்கவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவற்றதாக உள்ளது. உங்களுக்கு போதிய குருபலம் கிடையாது. மேலும் உங்களுக்கு சுப விரய குருபலம் வந்துள்ளதால் சிலருக்கு திருமணம் நடைபெறும் சூழ்நிலை உண்டு. ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொண்டால் திருமண வேலைகளை வரும் சித்திரை முதல் பார்த்துக் கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் சில பிரச்சினைகள் குடும்ப ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. உற்றார்¸ உறவினர்¸ நண்பர்கள் போன்றவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநாராயணனை நம்புங்கள்¸ நல்லதே நடக்கும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இரண்டும் கெட்டான் சூழ்நிலை இந்த ஸ்தானத்திற்கு விழுந்துள்ளது. குரு பார்வையால் உங்களது ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். உடலில் சிற்சில நோய்களின் தாக்கம் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் கணவனோ¸ மனைவியோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் சத்ரு பாவமானது உயர்ந்து பின் தாழும். உங்களுக்கு ஏற்படும் அனுபவம் மூலம் யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்பதை உணருவீர்கள்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டிய திருக்கும். ஆயுள் பாவம் பரவாயில்லை. தந்தை-மக்கள் உறவுமுறை சீராக அமையாது. உங்களது கருத்துக்களையும்¸ செய்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே சமயம் அவர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தங்களுக்கு வரும் பங்கினை உறுதி செய்வார். உங்களது கல்வியோகம் சுமாராக உள்ளது. தடைபட்ட கல்வியை தொடர்வதற்கு சற்று அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். உயர்கல்வி யோகம் ஒரு சிலருக்கு மட்டுமே உருவாகும். மற்றவர்கள் ஏதாவது தொழிலை செய்து கொண்டே கல்வியறிவு பெறுவர்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானமானது ராகுவின் அமைப்பால் மட்டுமே சிறப்பு பெறும். விவசாயத் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மந்தம் நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு புதிய மூலதன முதலீடுகளும்¸ கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு தனியார் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பிட மாற்றமும்¸ வேலையில்லாதவர்களுக்கு சிரமமான வேலைகளும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் லாபஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். மிக நல்ல அமைப்பு ஆகும். வருமானத்திற்கு ஏதும் பஞ்சம் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத இனங்களால் நமக்கு தேவையான நேரத்திற்கு பொருளாதாரம் புரட்ட முடியும். உங்களின் இருக்கும் ஒரே பலவீனம் என்னவெனில் கைதூக்கி விட்டவர்களை நீங்கள் நம்ப மறுப்பதுதான். கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதை எப்படி? இப்போது எப்படி இருக்கிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் குணம் என்றுமே மாறாது. நிறை குடம் தளும்பாது.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். அவர் உங்கள் ராசி அதிபதி ஆவார். ஆகவே உங்களுக்கு அசுப விரய பலன்களை நிச்சயம் கொடுக்க மாட்டார். சுப விரயங்கள் நிச்சயம் உண்டு. இக்காலத்தில் நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு சமயோஜிதமாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாத கற்பனைகளை செய்யக்கூடாது. அவரவர் விதிகளை ஆண்டவன் நிர்ணயிப்பார். இந்த உலகமும்¸ காலமும் நிலையானது அல்ல. உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெற்றே ஆகும். உங்கள் ராசி அதிபதி குரு அதிதேவதை தட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் எல்லாம் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ முதியோர்களுக்கு அன்னதானம்¸ கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும்¸ நூல்களில் துர்க்கா அஷ்டகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸2¸9. பரிகார யந்திரங்கள் : மீன ராசி யந்திரம்¸ ஸ்ரீகுருபகவான் யந்திரம். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸ பொன்னிறம்¸ இளம்சிவப்பு¸ வயலட். அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் கனகபுஷ்பராகம்

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்.

Homeசெய்திகள்சிபிஐ விசாரணை-தண்டனையிலிருந்து தப்பிக்க கொலை நாடகம்

சிபிஐ விசாரணை-தண்டனையிலிருந்து தப்பிக்க கொலை நாடகம்

Date:

Latest stories

போட்டி கொடி-பாஜக, திமுக மாறி மாறி கோஷம்

புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலைய துவக்க விழாவில் பாஜகவினரும், திமுகவினரும் மாறி...

ஜமாபந்தி நடக்கும் நாள் மற்றும் ஊர்களின் விவரம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்...

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த சிவாச்சாரியார்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குறித்து அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை...

அன்னதான பேனரில் அண்ணாமலையார் படம் இல்லாததற்கு எதிர்ப்பு

சித்ரா பவுர்ணமி அன்னதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பேனரில் அண்ணாமலையார் படம் இல்லாததற்கு...

உறுதி அளித்தால்,மக்களிடம் பேசுகிறேன்-கலெக்டரிடம் கேட்ட எம்.பி

உறுதி கொடுத்தால் சாலை மறியல் செய்யும் பொது மக்களிடம் பேசுவதாக கலெக்டரிடம்...

சிறுமி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளான நபர் கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்து அவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள கீழ்பாலானந்தல் கிராமத்தில் 30.10.2022 அன்று முனியப்பன் என்பவரின் நிலத்திலுள்ள வைக்கோல் போர் எரிவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வைக்கோல் போர் முழுவதும் எரிந்திருந்தது. அதன் அருகே மண்ணெண்ணெய் கேனையும், சிறிது தொலைவில் பைக் ஒன்றும், செல்போன் இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் ரத்தக் கறையும் காணப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. எந்த தடயமும் சிக்கவில்லை.

சிபிஐ விசாரணை-தண்டனையிலிருந்து தப்பிக்க கொலை நாடகம்

இதையடுத்து அந்த பைக்கின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பைக் திருவண்ணாமலை வட்டம் கோபாலபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 34) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

See also  பத்தியாவரம் பள்ளியில் மாணவர்களின் மர்ம மரணங்கள்

மணிகண்டன், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2013ம் ஆண்டு மேல்பாலானந்தல் பரமசிவம் என்பவரது மகள் பச்சையம்மாளை (வயது 4), பள்ளியில் இருந்து கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் மணிகண்டனுக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்காததால் மணிகண்டனை விடுதலை செய்த நீதிபதிகள், போலீசாரின் விசாரணை சரியில்லை என கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிபிஐ விசாரணை நடைபெற்று இறுதி நிலையில் உள்ளது. இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என பயந்து மணிகண்டன் தான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆரணியில் வீடு எடுத்து தங்கியிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.

மணிகண்டனின் உடலில் இருந்து இரத்தத்தை எடுத்து, வைக்கோல் போர் எரிந்த இடத்தில் தெளிக்க உதவிய திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக (Ward Boy) வேலை செய்யும் பாண்டி என்கிற பாண்டியராஜனை (25) போலீசார் கைது செய்தனர். இவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், ஊரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

See also  12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சோமாசிபாடி ஏரி

மேலும் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை வட்டம் அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்கிற சத்தியராஜ் (26), ஆரணியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து மணிகண்டனை தலைமறைவாக தங்க வைத்த அவரது தங்கையின் கணவர், வந்தவாசி வட்டம் பெரிய கொழப்பலூரைச் சேர்ந்த சரத் குமார் (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளானவர், கொலை செய்யப்பட்டாக கபட நாடகம் ஆடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Related stories

spot_img
error: Content is protected !!