Homeஆன்மீகம்கடகம்¸ சிம்மம். கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

கடகம்¸ சிம்மம். கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்


யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் கணித்த கடகம்¸சிம்மம்¸கன்னி ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்.

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

நேற்று மேஷம்¸ ரிஷபம்¸ மிதுனம் ராசிக்கான பலன்களை  https://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html  பார்த்த நிலையில் இன்று கடகம்¸ சிம்மம். கன்னி ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்போம். 

கடகம்¸ சிம்மம். கன்னி ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

பௌர்ணமி சந்திரனின் பூரண அருள் பெற்ற கடகராசி நேயர்களே! கமுக்கமாக இருந்து காரியங்களை சாதிக்கும் திறனுடையவர்கள். பிறர் கருத்துக்களை ஏற்காமல் ஞானிபோல் அலைபவர்கள். உடலில் கவர்ச்சிக்கு முதலிடம் தருபவர்கள். எடுக்கும் முடிவுகளை அடிக்கடி மாற்றம் செய்பவர்கள். வீட்டில் உள்ளவர்களை விட அந்நியரிடத்தில் அதிகம் பாசம் வைக்கும் கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 8ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 12¸2¸4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 7ல் அமர்ந்து 9¸1¸4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 11¸5ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் உடல் ஸ்தானத்திற்கு சனிபகவானின் 7ம் பார்வை விழுகின்றது. உங்களுக்கு இப்போது கண்டகச்சனி காலம் மட்டுமல்ல¸ அஷ்டம குருவும் இணைந்து பலன்களை கொடுக்க உள்ளது. மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் ஆகும். உடல் நலத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுவீர்கள். அதனால் உடல் சோர்வடையும். சூழ்நிலை உள்ளது. ஏதோ ஒருவிதமான மனபயம் உங்களை சூழ்ந்து கொண்டே இருக்கும்¸மன அழுத்தம் தீர ஆன்மீக சுற்றுலா அல்லது ஏதாவது யோகா¸ தியானம் என்று ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றவும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். இது நல்ல அமைப்பு ஆகும். மனதில் எவ்வளவு போராட்டம் இருந்தாலும் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருளாதார வசதியை குருபகவான் கொடுத்து அருள்வார். உங்களது குடும்பத்தில் பல நெருக்கடிகள் உருவாகும் சூழ்நிலை உண்டு. கண்டும் காணாமல் இருந்து கொள்ளவும். பிரச்சினை எவ்வழி வந்ததோ அவ்வழியே காணாமல் போய்விடும். உங்களது நாவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கும் முன் நின்று ஜாமீன் சொல்ல வேண்டாம், மாட்டிக் கொள்ள நேரிடும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானம் பலவீனமாக உள்ளது. மனதில் ஒரு விதமான நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு தைரியம் பெருக செவ்வாய் மற்றும் முருகப்பெருமான்¸ சக்தி வழிபாடு செய்து வந்தால் நன்றாக இருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் உள்ளங்கையை பார்த்துவர தன்னம்பிக்கை உருவாகும். உங்களது சகோதர பாவம் பலவீனப்பட்டு உள்ளதால் சகோதர சகோதரி வகையில் ஒரு சில பிரச்சினைகள் நீரு பூத்த நெருப்பாக கணன்று கொண்டு இருக்கும். அதை ஊதி பெரிதாக்க வேண்டாம். தீர்வுக்கான வழியை தேடுங்கள். நன்மை உண்டு.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இரண்டு கிரகங்களின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தானத்தை பொருத்தவரை இன்பம்¸ துன்பம் கலந்தே அனுபவிக்க வேண்டும். உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் அவ்வப்போது சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக மறைவிட உறுப்புக்கள் சார்ந்த நோய் தொற்று ஏற்படும். வீடு¸ மனையை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நலம் தரும். வாகனயோகம் தற்சமயம் உங்களுக்கு இல்லையாதலால் சற்று பொறுத்திருக்க வேண்டும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். உங்களுக்கு பூர்வ புண்ணிய பலம் குறைவாக உள்ளது. உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனை செய்து வந்தால் பாவ பலம் குறைந்து புண்ணிய பலம் அதிகமாகும். கெடுவினைகள் குறையும். உங்கள் புத்திர பாக்யமானது பலவீனம் அடைந்துள்ளது. இந்த ஸ்தானத்தில் கேது அமர்ந்து உள்ளதால் அருகில் இருக்கும் கோவில்களில் உள்ள நாக தேவதைகளுக்கு பூஜை செய்யவும். உங்கள் குழந்தைகளின் உடல்நலம்¸ கல்விநிலை சற்று சுமாராக உள்ளது. தேவையான கவனம் செலுத்தவும்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு பலம் அதிகமாக உள்ளது. கடன்கள் வியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தேவையில்லாத¸ ஆடம்பரமான வியங்களுக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்களுக்கு கொடுப்பதற்கு பலர் உள்ளனர். ஆனால் அதை திருப்பி செலுத்துவதற்கு படாதபாடு படுவீர்கள். உங்கள் உடம்பை பொருத்தவரை மன அழுத்தம் ஏற்படும். இதனால் உடம்பில் அசதி¸ சோர்வு¸ சோம்பேறித்தனம் என்று உருவாகும். உங்களுக்கு இதுவே நோய் ஆகும். மனதில் உள்ளதை யாரிடமாவது கொட்டி தீர்த்து விடுங்கள். கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். இது கண்டகச்சனி காலம் ஆகும். இப்போது உங்களுக்கு குருபலம் இல்லை. மேலும் ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ளவும். மீனம் ராசிக்கு குருபகவான் வரும் காலம் திருமணம் நடைபெற ஏதுவாகும். திருமணம் ஆன தம்பதியருக்கு நடுவில் சில பிரச்சனைகள் கண்டிப்பாக இருந்தே தீரும். கணவன், மனைவி யாராவது ஒருவர் நேர காலத்தை உணர்ந்து விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினையில் இருந்து விடுபட்டு குடும்பம் குதூகலமாக செல்லும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர உள்ளார். “இம்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும்” என்ற கவிக்கேற்ப உங்களது வாழ்க்கையில் நீங்கள் நின்ற ஸ்தானத்திலிருந்து சற்று கீழிறங்கும் சூழ்நிலை உண்டு. ஆயுளுக்கு எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாது. அதே வேளையில் உடம்பிற்கு ஏதாவது ஒன்று வந்து செல்லும். உங்கள் மாங்கல்ய ஸ்தானம் நன்றாக உள்ளது. சிற்சில கருத்து வேறுபாடுகளால் குழப்பம் உருவாகும். உங்கள் சத்ரு பாவம் பலமுள்ளதாக உள்ளது. உங்களை அனைவரும் விரோதியைப் போல் பார்ப்பார்கள். எச்சரிக்கை தேவை. 

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே தந்தையின் உடல்நிலையில் சற்று எச்சரிக்கை தேவை. ஆயுளுக்கு எவ்வித பங்கமும் இல்லை. முகம்¸ கை¸ கால் போன்றவற்றிலும் வாதம்¸ கபம்¸ ஜூரம் போன்றவற்றிலும் எச்சரிக்கை தேவை. தந்தை-மக்கள் உறவுமுறை அவ்வளவு சரியிருக்காது. தந்தையின் சொத்து விசயத்தில் எச்சரிக்கை தேவை. உங்கள் கல்வி யோகமானது தடைபட்ட நிலையில் உள்ளது. பெரும் பிரயத்தனம் கொண்டு படிக்க வேண்டும். சரஸ்வதியை வணங்கி வரவும். சகலமும் மேன்மை அடையும்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக இருக்கிறது. விவசாய சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான நிலை மாறுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலையும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க உதவியும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு¸தனியார் துறையில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத இடமாற்றமும்¸ வேலை இல்லாதவர்களுக்கு தற்காலிக வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு உதவிகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதற்கான அமைப்பை ராகுபகவான் ஏற்படுத்துவார். அதே சமயம் தேவைக்கு அதிகமாக எதிர்பார்க்க கூடாது¸ கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும். மேலும் நாமும் சரி நம் வீட்டிலும் சரி சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். ராகுபகவான் நமக்கு உண்மைக்கு புறம்பான வழிகளில் பொருளாதாரத்தை ஏற்படுத்துவார். எச்சரிக்கை தேவை.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். கண்டக சனி காலம். அஷ்டமத்து குரு என்று பயப்பட வேண்டாம். நாம் வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும். எங்கும் ஓடிவிட முடியாது. அதற்கு தகுந்தாற்போல் நமது வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொண்டால் இந்த காலத்தை இனிதே கடக்க முடியும். சனி¸குரு¸ கேது போன்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லை. ஆகவே அதற்கு தகுந்தாற்போல் இறை வழிபாட்டினை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ராசி அதிபதி சந்திரன். அதிதேவதை பராசக்தியை வழிபட்டு பரவசம் அடைய முயற்சிப்போம்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவான் தரிசனமும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனையும்¸ திருப்பாம்புரம்¸காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுவுக்கு பரிஹாரமும்¸ நூல்களில் சக்தி கவசத்தையும்¸முதியோர்களுக்கு உணவு தானமும் , நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2¸1¸3¸9 அதிர்ஷ்ட ராசிக்கல் : முத்து அதிர்ஷ்ட நிறம் : பச்சை¸ வெண்மை¸பொன்னிறம்¸ வெளிர்மஞ்சள். பரிகார யந்திரங்கள் : கடகராசி யந்திரம்¸ ஸ்ரீசக்கரம். 

கடகம்¸ சிம்மம். கன்னி ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

பராசக்தியின் வாகனமான சிம்மத்தின் அருள்பெற்ற சிம்மராசி நேயர்களே! எந்த ஒரு செயலையும் தீவிர ஆற்றலுடன் செய்பவர்கள். யாருக்கும் கட்டுப்படாத வசீகரமான உணர்ச்சி வேகத்துடன் ஈடுபடுவதால் எதிரிகள் உண்டு. சமாளிக்கும் திறமையும் உண்டு. கௌரவம் பார்ப்பதால் கவலை அடைபவர்கள். குடும்ப பெருமையை நிலைநாட்டுபவர்கள். அரசியல்¸ காவல்துறை இவர்களுக்கு கைகொடுக்கும். உயர்ந்த இதயம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 7ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 11¸ 1¸ 3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 6ல் அமர்ந்து 8¸12¸3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 10¸4ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த  குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவானின் 7ம் பார்வைபடுகிறது. இது மிகவும் நல்ல அமைப்பு ஆகும். உங்கள் உடம்பு தெளிவு பெற்று பிரகாசிக்கும் சூழ்நிலை உண்டு. முகம் மலர்ச்சி பெறும். மனதில் சந்தோஷமான மின்மினி பூச்சிகள் வந்து செல்லும். கடந்த காலங்களில் இருந்து வந்த நோய் தாக்கங்கள் ஒவ்வொன்றாக விடைபெற ஆரம்பிக்கும். நீங்கள் செய்யும் செய்யப்போகும் செயல்களில் நன்மைகள் ஏற்படக்கூடிய நல்ல நேரம் வந்துவிட்டது. உங்களை பார்த்து மற்றவர்கள் அரண்டுபோய் நிற்பார்கள். நல்ல காலம் பிறந்துவிட்டது.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானம் மிக நல்ல நிலையில் உள்ளது. தனஸ்தானத்தை பொருத்தவரை தடையில்லாத பொருளாதார வளம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். நலிவுற்று இருந்த பணப்புழக்கம் தலைநிமிர்ந்து நடைபோடும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை¸ சச்சரவுகள் நீங்கக்கூடிய காலமாகும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் தாண்டவமாடும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும்¸ ஆதரவும் கிடைக்கும். உங்கள் வாக்கு ஸ்தானத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. முன் ஜாமீன் நிற்க வேண்டாம். மாட்டிக்கொள்ள நேரிடும். நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருக்கவும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. ஆகவே நன்மையும் தீமையும் கலந்தே இவ்விடம் பலன் தரும். உங்கள் தைரியம் மிக அதிகமாகும். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய யுக்தி கிடைக்கும். உடல் தைரியம் இருந்தால் மட்டும் போதாது. சமயோஜித புத்தியும் வேண்டும். உங்கள் சகோதர,சகோதரி வகையில் ஏதாவது பிணக்குகள் தோன்ற வாய்ப்பு உண்டு. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொத்து¸ பணம் சம்பந்தப்பட்ட வகையில் வில்லங்கம் ஏற்படும். தகுந்த முன் யோசனையுடன் செயல்படவும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார். இது நல்லதல்ல. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் உடம்பு¸ மனம் கெடக்கூடிய சூழ்நிலை உண்டு¸ வயிறு¸ இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். தாய்-மக்கள் உறவுமுறை சரியிருக்காது. வீடு¸ மனை அமைப்பானது வரும் மார்ச் மாதம் வரை நேரம் சரியில்லை. அதன்பின் நன்றாக உள்ளது. அதுவரை பொறுத்திருக்கவும். புதிய வீடு¸ மனை¸ மாற்றங்கள் கண்டிப்பாக பிற்பகுதியில் உண்டு. உங்களது வண்டி வாகனம் குருப்பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில் அருமையான லாபம் தரும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானம் ஓரளவு வலுப்பெற்று உள்ளது. இருந்த போதிலும் புண்ணிய பலம் கூடுவதற்கு குலதெய்வ வழிபாட்டினை செவ்வனே செய்துவர வேண்டும். சுகஸ்தானம்¸ தொழில் ஸ்தானத்தில் பாம்புகளின் சஞ்சாரம் உள்ளதால் நாகதேவதை வழிபாடு செய்து வரவும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு இது ஒரு அருமையான காலம் ஆகும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரம் செய்து கொண்டால் குவாகுவா சத்தம் கேட்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை வெகு ஜோராக இருக்கும்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான்  அமர்ந்துள்ளார். மிக நல்ல அமைப்பு ஆகும். வரும் 2023 வரை நீங்கள் பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்பீர்கள் என்று உறுதி கூற முடியும். அதேசமயம் கடன் சுமைகளை அதிகம் சுமக்க வேண்டாம். கடன்களை பொருத்தவரை எங்கு¸ எதற்கு¸ எப்போது என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள். அதிலிருந்து விடுபட்டு விடலாம். உங்கள் உடலில் சூடு சம்பந்தமான நோய்களும்¸நுரையீரல்¸ சளி சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஸ்படிக மணி மாலை அணிவதால் உடம்பு சூட்டை குறைக்க முடியும். நீர் அதிகமாக அருந்தவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்தின் குருபகவான் அமர்ந்து பரிபாலனம் செய்ய உள்ளார். மிகவும் அற்புதமான காலம் ஆகும். திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது குருபலம் பிறந்து விட்டதால் திருமண காரியங்கள் ஜாம் ஜாமென்று நடக்கும். ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையில் இருந்துவந்த கசப்புணர்ச்சி நீங்கக்கூடிய காலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஒருசிலர் ஆன்மீகச் சுற்றுலா செல்லும் காலம் உண்டாகும். குடும்பம் சந்தோஷ கடலில் திளைக்கும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். உங்களது ஆயுள் சனியருளால் தீர்க்கம் பெறும். அதே சமயம் உடல்நிலையில் சிற்சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார். கவனமாக இருக்கவும். உங்கள் மாங்கல்ய ஸ்தானத்திற்கு சனிபார்வை விழுவது நல்லதல்ல. கணவன்-மனைவி இடையே சில சலசலப்பு  உருவாகும். விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை வளம்பெறும். உங்கள் சத்ரு பாவமானது பலவீனம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில் நம்மை மதித்தவர்கள் இக்காலத்தில் நம்மை மதித்து நடக்க ஆரம்பிப்பார்கள். ஜாக்கிரதையாக இருக்கவும்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானம் ஓரளவு பலம் அதிகரித்துள்ளது. தந்தையின் ஆயுள் தீர்க்கம் பெறும். உடல்நிலையில் இரத்தம்¸ சதை¸ எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். தக்க மருத்துவமுறைகளை கையாளவும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையின் சொத்துக்கள் சரியான முறையில் பிரித்து கொடுக்க இக்காலம் உதவும். உங்கள் கல்வியோகம் வெகு ஜோராக உள்ளது. விரும்பிய கல்வியை பெற முடியும். தடைபட்ட கல்வியையும் தொடர முடியும். ஒருசிலருக்கு வேலை வாய்ப்புடன் கல்வி கற்கும் யோகமும் உண்டாகும். ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வரவும்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மாற்றம் தரும் வேளையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசாங்க கடன் உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு நன்மையான பலன்களும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு காலம் கனிவாகவும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடமாற்றமும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும். 

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. நல்ல முன்னேற்றம் காணும் நேரமாகும். குடும்பம்¸ தொழில்¸ பொருளாதாரம் என்று அனைத்து வகைகளிலும் நன்மைகள் நடைபெற உள்ளது. தக்கபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருங்காலத்திற்கு தேவையானதை இக்காலத்திலேயே சேமிக்க பழகி கொள்ள வேண்டும். நம்மிடம் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று வீண் ஜம்பம்¸ அநாவசிய செலவுகளை செய்ய வேண்டாம். அடுத்து வரும் காலங்கள் சுமாராக இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். குரு¸ சனி ஆகிய கிரகங்கள் நன்மையையும்¸ ராகு¸ கேது கிரகங்கள் அசுப பலன்களை கொடுக்கும் காலமாகும். எவ்வளவுதான் நாம் அனைத்திலும் முன்னேற்றம் அடைந்தாலும் ஏதோ ஒருவிதமான விரயச் செலவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அனைத்து விதமான யோசனைகள்¸ வழிகளை கையாண்டாலும் கூட நம்மை அறியாமல் ஒருவித பயம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது சனி பார்வையால் ஏற்படும் உணர்வாகும். இவைதீர உங்கள் ராசி அதிபதி சூரியன் அதிதேவதை சூரிய நாராயணரை வணங்கிவர அனைத்தும் சுபமாகும்.

பரிஹாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழ்ப்பெரும்பள்ளத்தில் உள்ள இராகு¸ கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ நூல்களில் துக்கநிவாரண அஷ்டகம் பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2¸1¸3¸9 அதிர்ஷ்ட ராசிக்கல் : மாணிக்கம்¸ புஷ்பராகம் அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்¸ மஞ்சள்¸ வெண்மை¸ இளம் சிவப்பு. பரிகார யந்திரங்கள் : சிம்மராசி யந்திரம். ஸ்ரீசூரியன் யந்திரம்.

கடகம்¸ சிம்மம். கன்னி ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

திருமோகூரில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலின் அம்சம் பொருந்திய கன்னி ராசி நேயர்களே! கல்வியில் மேன்மையாக¸ அன்பாக பழகக் கூடிய¸ இனிமையான பேச்சாற்றல் கூடிய¸ பிறருக்கு உதவி செய்யக்கூடிய¸ ஆராய்ச்சி தன்மை அதிகம் தொடர்புடைய அரசியல்வாதியாக¸கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் அல்லல்படும் கன்னிராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 6ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 10¸12¸2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 5ல் அமர்ந்து 7¸11¸2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 9¸3ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் , வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானம் சற்று பலம் குறைந்து உள்ளது. உங்கள் மனம் சஞ்சலப்படும் சூழ்நிலை உள்ளதால் எதிர்பார்த்த காரியங்களில் தடை ஏற்படும். உடலில் ஒருவித தேக்கமும் அசௌகரியமும் உருவாகும். சோம்பேறித்தனம் உடலில் குடி கொள்ளும். ஆகவே மேற்கூரிய அமைப்புகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை நீங்கள் கூட்டிக்கொள்ள வேண்டும். எவ்வேலைகளையும் தள்ளிப்போடக் கூடாது. நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தை செவ்வனே செய்து வந்தால் கேது கிரகத்தின் அருளால் நடைபெற வேண்டிய அனைத்தும் சுபமாக நடக்கும்.

தனம்¸ வாக்கு¸ குடும்பம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை விழுகின்றது. நன்மை¸ தீமை இரண்டும் கலந்தே இந்த ஸ்தானத்திற்கு கிடைக்கும். ஒருபுறம் பொருளாதார நிலை சீர்பட்டு வந்தாலும்¸ மறுபுறம் ஏதாவது ஒரு விரயச்செலவு கூடிக் கொண்டே செல்லும். தனவரவு நிலை பெற குபேர வழிபாடு செய்து வரவும். உங்கள் குடும்பத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். ஆளுக்கொரு திசை நோக்கி வாழ்க்கை பயணம் செய்வீர்கள். ஒன்று சேர முயற்சிக்கவும். உங்களது வாக்குஸ்தானம் பலவீனம் அடைந்துள்ளது. நாவினின்று வெளிப்படும் வார்த்தைகளை அளந்து வெளிவிடவும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். இவர் ஒருவரே இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். இயற்கையாகவே உங்களுக்கு உடல் தைரியம் கிடையாது. ஆனால் மனதைரியம் அதிகமாக உண்டு. சமயோஜித புத்தியும் உண்டு. அதை நீங்கள் உபயோகிக்க வேண்டும். உங்களது சகோதர பாவமானது சற்று சஞ்சலத்துடன் நகர உள்ளது. சகோதர சகோதரிகளுக்கிடையில் ஒருவிதமான கருத்து வேறுபாடுகள் எழும். வெளியில் பார்க்கும் போது அது தெரியாது. ஆனால் மனம் புழுங்கி கொண்டு இருக்கும். ஜாக்கிரதை தேவை.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானம் ஒருவிதமான பளு அதிகமாகும் தன்மையில் உள்ளது. தாயின் ஆயுளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. உடலில் முகம்¸வாதம்¸ கபம்¸ ஜூரம் போன்றவற்றால் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம். தாய்-மக்கள் உறவுமுறை நன்றாக இருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைப்பது நல்லது. புதிய வீடு¸ மனை வாங்க விற்க இந்த நேரம் நன்றாக இல்லை. ஒருசிலருக்கு வீடு மாற்றம் நிகழும். உங்கள் வண்டி¸ வாகனம் சம்பந்தப்பட்ட அமைப்பு சாதகமான சூழ்நிலையில் இல்லை. விரயங்கள் அதிகம் தென்படும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பூர்வ புண்ணிய பலம் குறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகளை செய்துவரவும். பாவபலம் குறைந்து புண்ணியபலம் அதிகரிக்கும். உங்களது புத்திரபாக்யத்தை பொருத்தவரை இவ்விடத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். புத்திர பாக்யத்தில் தடை ஏற்படுத்துவார். ஜெனன ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை சுமாராகவே இருக்கும். போதிய கவனம் தேவை.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர உள்ளார். இது நல்லதல்ல. இருந்தாலும் குருவின் பார்வை பலம் நமக்கு சாதகமாக இருக்கும் என்றே நம்பலாம். கடன் விசயத்தைப் பொருத்தவரை கானல் நீர் போல¸ கடன் முடிவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் தீராது. திருச்சேறை சென்று ஸ்ரீருண லிங்கேஸ்வரரை வணங்கி வரவும். உங்கள் உடம்பில் சளி¸ கபம்¸ சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எளிதில் ஜலதோஷம் பிடிக்கும் சூழ்நிலை உள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை தேவை. வாரம் ஒருமுறை பச்சை காய்கறிகளை உணவில் சேர்க்கவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனி தனது 3ம் பார்வையை செலுத்துகிறார். இப்போது உங்களுக்கு போதிய குருபலம் இல்லை. ஆகவே நீங்கள் அடுத்த வருடத்திற்கு திருமணத்தை தள்ளிப் போடலாம். ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொள்ளவும். திருமணம் ஆன தம்பதியருக்கு நடுவில் சில பல கருத்து வேறுபாடுகள் வரவே செய்யும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் இந்த சூழ்நிலையில் இருந்து விலகலாம். ஸ்ரீலட்சுமி நாராயணர்¸ சிவசக்தி வழிபாடு மூலம் மேற்கூரிய பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. உங்கள் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் அவ்வப்போது ஏதாவது மாற்றங்கள்¸உடல்நலக் கோளாறுகளால் தென்படும். பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. உங்களது மாங்கல்ய ஸ்தானம் திடமாக உள்ளது. குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் சில மனக்குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. எதையும் பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் சத்ரு ஸ்தானம் பலமாக உள்ளது. வம்புச்சண்டை¸ வாய்ச்சண்டை இரண்டும் வேண்டாம். போதிய வரை மிகவும் அமைதியாக இருப்பது நல்லது.

தந்தை¸ கல்வியோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தந்தையின் உடல்நிலையில் சற்று எச்சரிக்கை தேவை. தந்தையின் ஆயுளுக்கு எவ்வித பங்கமும் இல்லை. தந்தை-மக்கள் உறவுமுறை சற்று பின்தங்கும் சூழ்நிலை உண்டு. தந்தையின் சொத்து சம்பந்தப்பட்டவைகளில் ஏதாவது வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளவும். உங்கள் கல்வியோகமானது தடைபடும் சூழ்நிலை உள்ளது. கல்வியா? வேலையா? என்று மனம் பேதலிக்கும் சூழ்நிலை உண்டு. பயப்பட வேண்டாம். இது குறைந்த காலத்திற்குத்தான். பின் சரியாகிவிடும். திடமான முடிவு எடுக்க பழகுங்கள். 

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்த வருகிறார். ஆகவே விவசாய தொழிலில் உள்ளவர்களுக்கு விளைச்சல் நிதானமாகவும்¸ மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு மாற்றம் ஏற்படும் சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு தேவையான உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத இடமாற்றம்¸ வேலை இல்லாதவர்களுக்கு விருப்பமில்லாத வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை கிடைத்துள்ளது. தொழில்¸வேலை நன்றாக நடக்கிறது. ஆனால் வருமானம்தான் போதவில்லை என்று புலம்புவது தெளிவாய் கேட்கிறது. கோள்களின் கோலாட்டம் நம்மை இப்பாடு படுத்துகிறது. நீங்கள் என்ன செய்ய என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் வேலை எதுவோ அதைமட்டும் மனம் நோகாமல் செய்யவும். மற்றதை ஆண்டவன் பார்த்து கொள்வார். மரம் வைத்தவனுக்கு நீர் ஊற்றத் தெரியாதா என்ன? தைரியமாக இருக்கவும்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த இடத்திற்கு குருவின் 7ம் பார்வை விழுகிறது. இது மிகவும் நல்ல அமைப்பு ஆகும். 5ல் சனி¸ 6ல் குரு¸ 9ல் ராகு என்று மனம் கவலைப்பட வேண்டாம். இறை ரீதியாக 3ல் உள்ள கேது பல வியங்களுக்கு உங்களுக்கு உதவுவார். “சத்தியமாமுனி ஆறிலே காலிலே இருதலை பூண்டதும்” என்ற கவிக்கேற்ப யாருக்கும் நாம் கெடுபலன்களை செய்யாமல் சுபபலன்களை செய்து வந்தால் இந்த குருப்பெயர்ச்சி காலம் நமக்கு பொற்காலம் தான்.. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடவும். உங்கள் ராசிநாதன் புதன்¸ அதிதேவதை ஸ்ரீநாராயணரை வணங்கி வர நன்மைகள் பல உண்டு.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு சனிப்பீரிதி செய்வதும்¸திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு வழிபாடு செய்வதும்¸ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நூல்களில் கோளறுபதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6¸2. அதிர்ஷ்ட ராசிக்கல் : மரகதப்பச்சை¸ வைரம். அதிர்ஷ்ட நிறம்: சில்வர்¸சாம்பல்¸ பச்சை. பரிகார யந்திரங்கள் : கன்னிராசி யந்திரம். ஸ்ரீவிஷ்ணு யந்திரம்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும்  அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்

துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 22ந் தேதி வெளிவரும்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!