Homeஅரசு அறிவிப்புகள்ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை

ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை

Date:

Latest stories

க்யூ ஆர் கோடு ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை என...

திருவண்ணாமலை:-427 சமையல் உதவியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர்...

அங்கன்வாடியில் 439 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் அங்கன்வாடி பணியாளர்,குறு அங்கன்வாடி பணியாளர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4299 கொடி கம்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த கொடி கம்பங்கள் 4299...

வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை...

ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை

ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (tata electronics company)1000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட திருவண்ணாமலையில் 20ந் தேதி முகாமை நடத்த உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

1000-women-jobs-in-tata-company-with-a-salary-of-rs-15-thousand

பெண்களுக்கான வேலை

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 20-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1000 பெண் பணியாளர்கள்

இம்முகாமில் ஒசூரைச் சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (tata electronics company) பங்கேற்க உள்ளது. இந்நிறுவனம் சுமார் 1000 பெண் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

1000-women-jobs-in-tata-company-with-a-salary-of-rs-15-thousand

தகுதி

இதில் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண் பணியார்களை முகாம் நாளன்று தேர்வு நடத்தி தேர்வு செய்யவுள்ளது. முகாம் நாளன்று நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்களுக்கு பணியாணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

சம்பளம்

முதலாமாண்டில் ரூ.15000 (பதினைந்தாயிரம்) சம்பளமும், விடுதி வசதி, நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பும் மற்றும் சட்டப்படியான பிற சலுகைகளும் உண்டு என தெரிவித்துள்ளது.

நடைபெறும் இடம்

இதுகுறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமும் விருப்பமும் உள்ள பெண்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் டாடா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதால் இந்த வாய்ப்பை திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் பயன்படுத்திக் கொண்டு வேலை வாய்ப்பை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

1000-women-jobs-in-tata-company-with-a-salary-of-rs-15-thousand follow – Tiruvannamalai Agni Murasu Facebook

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Related stories

spot_img
error: Content is protected !!