Homeஅரசு அறிவிப்புகள்பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற உள்ளது.

16.08.2022 அன்று போளுர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 17ந் தேதி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 18ந் தேதி கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 23ந் தேதி செய்யார் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 24ந் தேதி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 25ந் தேதி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும்  கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் (லோன் மேளா) நடைபெற உள்ளது. 

இந்த சிறப்பு முகாம் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் கடன் தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சார்ந்த நபர்கள் பயன் பெறலாம். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

👉பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

👉விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். 

👉பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 8 வரை.

👉பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம்.

👉சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4சதவீதம்.

👉மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

👉சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம்.

👉மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

தகுதியுடையவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். 

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!